சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பொறுப்பேற்பு

Update: 2021-01-04 05:23 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜிப் பானர்ஜி இன்று பொறுப்பேற்றார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News