ஆவின் பொருட்கள் இன்று முதல் விலை உயர்வு

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-03-04 07:00 GMT

ஆவின் பொருட்களான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27லிருந்து ரூ. 30ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535ஆக உயர்ந்துள்ளது. மேலும் குல்பி 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News