'ராமாயணம்' இலக்கிய காவியத்தை தமிழில் எழுதியது யார்?

Who Wrote Ramayana in Tamil-ராமாயணம் தமிழ் மொழியில் யாரால் எழுத்தப்பட்டது? அதன் உட்கூறுகள் என்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-30 06:20 GMT

Who Wrote Ramayana in Tamil

Who Wrote Ramayana in Tamil-ராமாவதாரம் என்ற கதைத்தொடரே கம்பன் எழுதியதால் கம்ப ராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. ராமாயணம் என்பதைவிட கம்ப ராமாயணம் என்று குறிப்பிடுபவர்களே அதிகம்.

இது 12 ஆம் நூற்றாண்டில் தமிழ் கவிஞன் கம்பரால் எழுதப்பட்ட ஒரு தமிழ்க் காவியமாகும். வால்மீகியின் ராமாயணத்தை (இது சமஸ்கிருதத்தில் உள்ளது) அடிப்படையாகக் கொண்ட கதை. அது அயோத்தியின் அரசன் ராமனின் வாழ்க்கையை விவரிக்கிறது. இருப்பினும், ராமாவதாரம் பல விதங்களில் சமஸ்கிருத பதிப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

இதில் வலியுறுத்தப்பட்டுள்ள ஆன்மீக கருத்துக்கள், கதைக்களத்தின் பிரத்யேக சொல்லாடல்கள் ஆகிய இரண்டிலும் இந்த வரலாற்றுப் படைப்பை தமிழ் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடும் தமிழ் இலக்கியமாக விளங்குகிறது. தமிழில் இது மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

கம்பர் இந்தக் காப்பியத்தை பண்ணைகுலத் தலைவரான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியுடன் எழுதினார்.தனது புரவலருக்கு நன்றி செலுத்தும் வகையில், கம்பன் 1,000 செய்யுள்களுக்கு ஒருமுறை அவரது பெயரைக் குறிப்பிடுகிறார்.

இந்நூல் தமிழில் காண்டம் என்று ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. காண்டங்கள் மேலும் தமிழில் படலம் (படலம்) என விரிவடைகிறது. படலங்கள் 113 பிரிவுகளாகப் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த 113 பிரிவுகளில் தோராயமாக 10ஆயிரத்து 569 செய்யுள்கள் உள்ளன.

1. பால காண்டம் - (அத்தியாயம்: குழந்தைப் பருவம்)

2. அயோத்தியா காண்டம்-(அத்தியாயம்: அயோத்தியா)

3. ஆரண்ய காண்டம் - (அத்தியாயம்: காடு)

4. கிஷ்கிந்தா காண்டம் - (அத்தியாயம்: கிஷ்கிந்தா)

5. சுந்தர காண்டம் - (அத்தியாயம்: அழகு)

6. யுத்த காண்டம் - (அத்தியாயம்: போர்)

இந்துக்களின் சிறப்பு காவியம்

இந்த ராம காவியம், பல இந்துக்களால் பிரார்த்தனையின் போது வாசிக்கப்படுகிறது. சில வீடுகளில், தமிழ் நாட் காட்டியின் ஆடி மாதத்தில் (ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை) முழு காவியமும் ஒரு முறை படிக்கப்படுகிறது. இது இந்து கோவில்கள் மற்றும் பிற மத சங்கங்களிலும் படிக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், விஷ்ணுவின் அவதாரமான ராமரிடம் சரணடைவது பற்றி கம்பர் பேசுகிறார்.

சுந்தர காண்டம் அத்தியாயம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சுந்தரகாண்டம் மிகவும் பிரபலமானது. காவியத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், அவர்களின் கட்டுப்பாடு மற்றும் எதிர்கால நம்பிக்கைகள் பற்றி சுந்தரகாணடம் பேசுகிறது.

இலக்கியச் செறிவு

விருத்தம் மற்றும் சந்தம் ஆகியவற்றை கம்பன் பல்வேறு இடங்களில் வாக்கிய அமைப்புகளில் பயன்படுத்துவது, கதையின் உணர்ச்சிப்போக்கையும் கதை படிப்போருக்கான உன்னத மனநிலையையும் வெளிக்கொணருவதில் பயனுள்ளதாக இருக்கிறது. வார்த்தைகளைத் திறம்படத் தேர்ந்தெடுத்து கம்பன் பயன்படுத்தியுள்ள விதம், கம்பனின் கவித்திறனை உயர்த்திப்பிடிக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News