தனிமையிலே..இனிமை காண முடியுமா..? தனிமை..வரமா..? சாபமா..?

Thanimai Quotes Tamil-மானிடராய் பிறத்தல் அரிது..கூன்,குருடு,செவிடு நீங்கி பிறத்தல் அரிது..இப்போ தனிமையாக பிறப்பது கொடுமை..தனிமையாய் வாழ்வது கொடுமை..

Update: 2022-09-11 07:50 GMT

Thanimai Quotes Tamil

Thanimai Quotes Tamil

மனிதர்கள் பொதுவாகவே ஒரு சமுதாய வாழ்க்கை வாழ்ந்தவர்கள். டிவி வராத காலங்களில் இந்த ஊர் அழகானதாக இருந்தது. சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடினார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வு வளர்ந்தது. டிவி வந்த பின் வீடுகளுக்குள் முடங்கிப்போயினர். செல்போன் வந்ததும் இன்னும் அது தீவிரமாகிப்போனது. நகரமயமானதில் பல அபார்ட்மெண்ட்கள் முளைத்தன.

அங்கு வீட்டுக்குள்ளேயே குழந்தைகள் அடைக்கப்பட்டனர். உறவுகளின் மாண்பு தெரியாமல் போனது. சமூகத்தில் இணக்கமாக வாழும் சூழல் தெரியாமல் போனது. அதனால் சிறிய தோல்விகள் கூட தற்கொலைக்குத் தூண்டுதலாக இருக்கிறது. ஆனால், ஆரோக்கிய மனம் உள்ளவர்களுக்கு தனிமை சிந்திக்கும் திறன் வளர்க்கிறது. ஆன்மத் தேடலுக்கு வழிவகுக்கிறது. ஆக, தனிமை வரமாவதும் சாபமாவதும் நம் கையில்தான் இருக்கிறது. 

எங்கள் வாசகர்களுக்கு தனிமையின் மேற்கோள்கள்..இதோ..!

  • சில மனிதர்கள் நம்மை காயப்படுத்திய போதும். நம்மை ஆறுதல் படுத்தும் ஒன்று, தனிமை. மட்டுமே..!
  • தனிமை கொஞ்சம் வித்தியாசமானது ஒன்று நாமாக எடுத்து கொண்டால் தனிமை இனிக்கும். அடுத்தவர் நமக்கு கொடுத்தால் தனிமையே கசக்கும்..!
  • அழுத்தமான பல முடிவுகளையும் ஆழமான பல சிந்தனைகளையும் மன உறுதியை வளர்த்து எடுத்தது
  • என் தனிமை உலகம்..!
  • தனிமை சில நேரங்களில் இன்பம். தனிமை சில நேரங்களில் துன்பம். தனிமை சில நேரங்களில் வரம்
  • தனிமை சில நேரங்களில் சாபம்.
  • எத்தனை பேர் என் அருகில் இருந்தாலும், அதில் நீ மட்டும் இல்லை என்றால் அது தனிமையே..!


  • ன்னோடு பேசாத நேரத்தில் கூட உன் நினைவுகளோடு பேசி கொண்டு இருக்கிறேன்.
  • தனிமையும் இனிமையடி உன் நினைவுகளால்..!
  • மற்றவரை காதலித்து வாழ்வதை விட, இந்த தனிமையை காதலித்து வாழ்வதே மேல்..!
  • மன நிம்மதிக்கான தனிமை மகிழ்ச்சியானது. ஆனால்,அன்பு செய்ய யாரும் இல்லாத தனிமை மிக கொடுமையானது..!
  • தனிமையை எண்ணி கவலை கொள்ளாதே..தனிமைதான் வாழ்க்கையையும் உலகத்தையும் புரிய வைக்கும்..!
  • உன்னை சுமந்த மனதில், வேறு ஒருவரை சுமக்க விருப்பம் இல்லாமல் உன் நினைவை மட்டுமே சுமந்ததால்,
  • தனிமை எனக்கு சொந்தமாகியது..!


  •  தனியாக இருப்பதே ஒரு சுகம் தான். கற்பனைக்கு உயிர் கொடுத்து கவிதை கிறுக்கினேன்..! நிழலோடு பேசிக் கொண்டு தூரம் போகிறேன்..! யாருக்கும் தெரியாத நினைவை திறந்து பார்த்து ரசிக்கிறேன்..!
  • யாருடைய மாற்றமும் உன்னை பலவீனமாக்கக் கூடாது..!
  • அன்று நீ பேசினாய் மணிக் கணக்காய்.. இன்று உன் மெளனம் பேசுகிறது, நாள் கணக்காய்..!
  • விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில், அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு..!
  • நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது, இந்த வாழ்க்கை..!
  • நிம்மதியை இழந்து தனிமையை சந்தித்தேன்..! தனிமை சிரித்தது இது தான் வாழ்க்கை என்று..! இது தான் அனுபவம் என்று..!
  • யாருமற்ற தனிமையான பொழுதுகள் தான், எல்லாரை பற்றியும் புரியவைக்கிறது..!
  • உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் தனிமை என்னைக் கொல்கிறது..! என் தனிமையை உன் மனம் அறியுமோ?


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News