கதை சொல்றேன்..விடை சொல்றீங்களா..? விடு..விடு..விடுகதைங்க..!

Tamil Riddles With Answers-விடுகதை என்பது காலங்காலமாக இருந்து வரும் ஒரு சொல் விளையாட்டு என்றாலும் கூட இது அறிவை வளர்க்கும் ஒரு வழியாகும்.

Update: 2022-11-04 06:23 GMT

Tamil Riddles With Answers-விடுகதைகள் (கோப்பு படம்)

Tamil Riddles With Answers-புதிரை விடுவிக்கும் கதையே விடுகதை. பொழுது போக்காக இந்த விடுகதைகள் போடப்பட்டாலும் கூட இது ஒரு வகையில் சிந்திக்கும் திறனை வளர்க்கும். மொழி அறிவை வளர்க்கும். இதோ உங்களுக்காக விடுகதைகள்..

  • வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. பாவம்..அவர் யார்? செருப்பு
  • இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்
  • ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டைகள். அவை என்ன ? தென்னை மரம்
  • முட்டையிடுவாள் குஞ்சு பொரிக்கத் தெரியாது. கூட்டில் குடியிருப்பாள், கூடு கட்டத் தெரியாது. நன்றாக பாடுவாள். ஆனால், சங்கீதம் தெரியாது. – அவள் யார்? குயில்

tamil riddles with answers

  • அழகான பெண்ணுக்கு அதிசய வியாதி. பாதிநாள் தேய்ந்து போவாள். மீதி நாள் வளர்வாள் அவள் யார்? நிலா
  • ஆயிரம் ஆயிரம் பேராக அணி வகுத்தாலும் ஆரவாரம் சிறிதும் இல்லை. அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்
  • கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன? சவப்பெட்டி
  • தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? வாழை மரம், வாழைத்தார்

tamil riddles with answers

  • நீண்டு வளர்ந்த மலை நடுவே உடன் பிறப்பு இருவர். ஆனால் ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்? கண், மூக்கு.
  • கையை வெட்டுவார். கழுத்தை வெட்டுவார். ஆனாலும் அவர் கொலைகாரன் இல்லை. யார் அவர்? தையல்காரர்
  • மாலையானால் சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு என்னவோ இரத்தம் மட்டுமே அவன் யார்? கொசு
  • வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி. அவர்கள் யார்? பூட்டும் சாவியும்

tamil riddles with answers

  • காட்டிலே பச்சை. கடையிலே கறுப்பு. வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு.
  • என்னைத் தெரியாத போது நான் மர்மமானவள். என்னை தெரிந்து கொள்ள ஆவல் அதிகம். தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவள். நான் யார்? ரகசியம்
  • நடக்கவும் மாட்டேன், ஆனால், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? கடிகாரம்
  • மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? ஈசல்
  • நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? பென்சில்

tamil riddles with answers

  • விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? தும்பிக்கை
  • கண்ணால் பார்க்கும் அவனை கையால் பிடிக்கமுடியாது அவன் யார்? நிழல்
  • சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம்
  • வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வழுக்கை / பொக்கை
  • கடிக்க முடியாத அவனின்றி உணவே இல்லை.அவன் யார்? தண்ணீர்

tamil riddles with answers

  • கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் பிறந்த நான் யார்? பட்டுத்துணி
  • இவன் வாலுக்கு வையகமே நடு நடுங்கும் அவன் யார்? தேள்
  • படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு
  • கருத்த செடியை பிடுங்கலாம்.ஆனால் நடமுடியாது அது என்ன? தலைமுடி
  • உடம்பில்லா அவன் பத்து சட்டை அணிந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்

tamil riddles with answers

  • காலையிலும் மாலையிலும் நெட்டையாவேன். மதியம் குட்டையாகிவிடுவேன். நான் யார்? நிழல்
  • கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு
  • மரத்தின் மேலிருந்து தலைகீழாக தொங்குகிறேன். ஆனால் நான் மலைப் பாம்பல்ல. நான் யார் ? விழுது
  • உணவை ஆவலோடு எடுப்பான். ஆனால் அவனால் உண்ணமுடியாது. அவன் யார்? அகப்பை
  • காலையில் வந்த விருந்தாளி மாலையில் மாயமாகிப்போனார். அவர் யார்? சூரியன்

tamil riddles with answers

  • கந்தல் துணி கட்டியவள். முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தாள். அவள் யார்? சோளக்கதிர்
  • இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது. அது என்ன? பட்டாசு
  • ஆலமரம் தூங்க.. அவனியெல்லாம் தூங்க.. சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க.. ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு
  • கொதிக்கும் கிணற்றில் தைரியமாக குதித்துக் குண்டாகி வருவான்,வெள்ளைக்காரனாய். அவன் யார்? பூரி

tamil riddles with answers

  • கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வருவான், கூட்டம் சேர்த்தும் வருவான் – அவன் யார்? காகம்
  • எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்? செல்போன்
  • பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்
  • பார்க்கத்தான் கறுப்பு. ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன? தேயிலைத் தூள்
  • கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? படகு

tamil riddles with answers

  • பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? சீப்பு
  • கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? உப்பு
  • பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு
  • வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை
  • காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்? ரேடியோ
  • கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு

tamil riddles with answers

  • ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்
  • நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லமாட்டான். அந்த நாயகனுக்கோ உடல் மேல் மாளிகை..அவன் யார்? நத்தை
  • முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு தூக்கி அடிப்பான். உயிரை எடுப்பான். அவன் யார்? மின்சாரம்
  • நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? ஆமை
  • தொப்பொன்று விழுந்த மச்சானுக்கு தொப்பி கழன்று போனது. அவன் யார்? பனம்பழம்

tamil riddles with answers

  • மழைக் காலத்தில் குடை பிடிப்பான். அவன் மனிதனல்ல. அவன் யார்? காளான்
  • ஒற்றைக் குகைக்குள் 32 வீரர்கள். ராணியாக ஒரு நாகம். அது என்ன? வாய், பற்கள், நாக்கு
  • வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை
  • எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? அடுப்புக்கரி
  • மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை
  • நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்திருக்கும் அவன் உட்கார இடம் கொடுப்பான். அவன் யார்? நாற்காலி


  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News