ஒருவரியில் இத்தனை அழகான பொருளா..?! அடடே படீங்க..!

Tamil Quotes in One Line-தமிழில் ஒரு வரியில் ஒரு அர்த்தம் சொன்னால், அதன் பொருள் எவ்வளவு அழகு பெறுகிறது பாருங்கள்.

Update: 2023-01-01 06:00 GMT

Tamil Quotes in One Line

Tamil Quotes in One Line-தமிழ் இனிமையான மொழி. தமிழ் அழகுமொழி. பல மொழிகளில் புலமை பெற்றிருந்த பாரதியார் அதனால்தான் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணேன்.' என்று பாடினார். அப்படியான உயர் மொழி தமிழ்மொழி. தமிழில் நம்பிக்கைத் தரும் ஒரு வரி மேற்கோள்கள் உங்களுக்காக தரப்பட்டுள்ளன. படித்து பயன்பெறுங்கள்.

விடியல் என்பது கிழக்கில் மட்டுமே அல்ல, நம் உழைப்பிலும் உள்ளது.

சேமிப்பு இல்லையென்றால் உழைப்பு என்பது வீணே.

நல்ல மனசாட்சி தான் கடவுளின் கண்.

சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்கத் தவறாத ஒரே ஆசான், காலம்.

வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்.

நேரமின்மை என்பது நாகரீகமான புறக்கணிப்பு.

பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தங்கள் உள்ளன.

அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.

நம்பிக்கையை கொண்டு மனிதனின் வீரத்தை நிர்ணயித்து விடலாம்.

பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.

எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது.

அமைதியான கடலில் ஒவ்வொருவரும் சிறந்த மாலுமியாக இருக்கிறார்கள்.

அதிக ஓய்வு அதிக வேதனையை தரும்.

எல்லாம் உண்டு, ஆனால், எதுவும் நிரந்தமில்லை.

எதையும் விட்டு விடாதே.. கற்றுக் கொள்.

நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத ஒரே மருந்தாகும்.

அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.

நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை என்பது நம் கைவசம்

அனுபவம் அன்பாக சொல்லித் தருவதில்லை. கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் அன்பை எதிர்பார்ப்பதில்லை.

வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்.

குழந்தைகளின் அறியாமை மிக அழகு.

சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.

வீழ்வது தவறில்லை, ஆனால், வீழ்ந்தே கிடப்பது தான் தவறு.

இன்றைய வலி.. நாளைய வெற்றி..!

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.

சவால்" என்ற வார்த்தைக்குள் "வாசல்" என்ற வார்த்தை ஒளிந்திருக்கின்றது.

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.

செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்.

எண்ணங்களே நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றது. எண்ணம்போல் வாழ்க்கை.

விழுந்தால் அழாதே, எழுந்திரு. விழுவதும் எழுவதும் குழந்தைப்பருவத்தே நீ கற்ற பாடங்களே..!

வானிலையை விட அதிவேகமாக மாறுகின்றது மனிதனின் மனநிலை.

ஊமையாகவே இருந்து விடாதே, வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.

நாளை என்பது கனவு போன்றது.. இன்றைய நிஜத்தினை ரசித்து வாழ்.

அளவான உணவு உடலுக்கு நலம்.. அளவோடு பழகு உறவுக்கு நலம்.

லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது.

பேசித் தீருங்கள்.. பேசியே வளர்க்காதீர்கள்.

உரியவற்றை உரியவர்களிடம் சொல்லுங்கள், ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

உறுதி காட்டுங்கள், பிடிவாதம் காட்டாதீர்கள்.

தீர்வை விரும்புங்கள், தர்க்கத்தை வளர்க்காதீர்கள்.

சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.

செல்வாக்கு இருந்தாலும் சரியானதை செய்யுங்கள்.

யாரோடும் பகை இல்லாமல் புன்னகைத்து வாழுங்கள்.

ஆணவம் அழிவைத் தரும்.

கோபம் ஆபத்தைத் தரும்.

உழைப்பே உயர்வுக்கு வழி.


வாழ்க்கை குறுகியது ஆனால் அழகானது.

ஒரே ஒரு புன்னகை போதும் ஓராயிரம் பிரச்னைகளைத் தீர்க்கும்.

அதிகமான அன்பு ஒருவரை கோழையாக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News