குழந்தை பாக்யம் இல்லையா..? கவலை வேண்டாம்..! செயற்கை கருவூட்டல் இருக்கு ..!

IUI Treatment in Tamil-மருத்துவத்துறையின் வளர்ச்சி யாரும் சிந்தித்துப்பார்க்க முடியாத பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளன. அதில் குழந்தை பிறப்பும் ஒன்று.

Update: 2023-03-06 08:25 GMT

IUI Treatment in Tamil

IUI Treatment in Tamil-ஒரு காலத்தில் 12 குழந்தைகள் பெற்றுக்கொண்ட பெற்றோரும் உள்ளனர். அன்றைய உடல் ஆரோக்ய நிலை அப்படி இருந்தது. ஆனால், இன்று நமது உணவு பழக்க வழக்கங்களால் குழந்தைகள் பிறப்பதே அரிதாகி வருகிறது.

திருமணமாகி குழந்தை பிறக்காவிட்டால் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவே முடியாது. குறிப்பாக பெண்கள் குழந்தை விஷயத்தில் குறியாகவே இருப்பார்கள். 'என்னாச்சு..ஓன்றும் விசேஷம் இல்லையா..? ஏன் தள்ளிப்போகுது..?' என்று குடைவார்கள். இது சமூக நிலைப்பாடு என்றால், தனிப்பட்ட முறையில் குழந்தை பிறக்காத பெண்ணின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படும். இப்படி பெண்கள் இருவேறு பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

திருமணம் முடித்த தம்பதிகள் முதலில் எதிர்பார்ப்பது குழந்தை பாக்யம் மட்டுமே. ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் அமைவதில்லை. வளர்ந்த அறிவியல் மற்றும் மருத்துவ வளர்ச்சியால் இன்று கர்ப்பம் தரிக்க பல வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் இல்லையென்றால் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய காலம் இப்போது மலையேறிவிட்டது. ஆம், மருத்துவத்துறை இன்று பல சாதனைகளை எட்டியுள்ளது.அதில் ஒன்றுதான் செயற்கை முறை கருவூட்டல்.

செயற்கை முறை கருவூட்டல் என்றால் என்ன?

செயற்கை முறை கருவூட்டல் என்பது இயற்கையான முறையில் கருத்தரிக்க தாமதமாகும் தம்பதிகளுக்கு சில சிகிச்சைகள் மூலம் கணவனின் விந்தணுக்களையும் மனைவியின் சூல்முட்டையையும் சேரவைத்து கருவூட்ட வைப்பது.

இதில் எளிய முறையான IUI (Intrauterine insemination) முறையிலான கருவூட்டல், மிகவும் முன்னேற்றகரமான சோதனைக்குழாய் கருவூட்டலான IVF (In vitro fertilization) முறை மற்றும் நுண்ணிய நுட்பகரமான முறையான ICSI (Intracytoplasmic sperm injection) முறை என மூன்று முறைகளில் செயற்கை முறை கருவூட்டல் மேற்கொள்ளப்படுகிறது.

IUI முறை கருவூட்டல் என்றால் என்ன? (Intrauterine insemination)

ஆரம்ப சிகிச்சைகள் மற்றும் மாத்திரைகளில் கருத்தரிக்க முடியாத தம்பதிகளுக்கு IUI முறை பயன்படுகிறது. இதற்கு சீரான சூல் முட்டை வளர்ச்சி, அடைப்புகள் இல்லாத பலோப்பியன் குழாய்கள் மற்றும் ஓரளவு சராசரியான விந்து போன்றவை அடிப்படையான தேவைகள். இதற்கு நாம் மருந்துகள் மூலம் சூல் முட்டை வளர்ச்சியை தூண்டி 12ம் நாளில் ஸ்கேன் செய்து சூல் முட்டையின் வளர்ச்சி நிலைஅறியப்படுகிறது.

இதன் பருமனளவு 18 – 20mm ஆக இருந்தால் ஹார்மோன் ஊசி வழங்கப்படும்போது முட்டையானது வெளியேறும். பின்னர் 36 மணி நேரத்தில் விந்தணுக்களை செறிவாக்கி ஊசி மூலம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும். பின்னர் வழங்கும் ஹார்மோன் மாத்திரைகள் மூலம் கரு வளர்வதற்கு வகைசெய்யப்படும். இவ்வாறு முறையான கண்காணிப்பில் இருந்தால் வெற்றி விகிதம் 35 – 40 சதவீதம் நிச்சயம் இருக்கும். இதன் செலவும் மிக அதிகம் இல்லை.

IVF முறை என்றால் என்ன? (In vitro fertilization)

IVF முறை கருவூட்டலானது நீண்ட காலமாக குழந்தை பிறப்பது தாமதமடைந்து வரும் தம்பதிகளுக்கும் பலோப்பியன் குழாய்கள் இரண்டும் முற்றாக அடைக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் விந்துகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள ஆண்களுக்கும் IUI முறை பல தடவை செய்து தோல்வி கண்டவர்களுக்கும் செய்யப்படுகின்றது.

மேலே கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட காரணங்களுக்கு IVF முறையில் உள்ள நன்மை, தீமை இரண்டையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது இதற்கான செலவு மற்றும் இதன் வெற்றி சதவிகிதம் போன்றவைகளையும் அறிந்துகொள்ளவேண்டும். இதன் வெற்றி 25 – 30 சத விகிதமாக மட்டுமே இருக்கமுடியும்.

பொதுவாக 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் வெற்றி சதவிகிதம் குறைவாகவே இருக்கும். ஆனால் 40 வயதுக்கு உட்பட்டவர்களிடம் கூடுதல் சதவிகிதத்தை எதிர்பார்க்கலாம்.

ICSI (Intracytoplasmic sperm injection) கருத்தரித்தல் முறை

ஒரு ஆணின் விந்தணு ஒரு பெண்ணின் முட்டையை கருவுறச் செய்வதற்கு முன், விந்தணுவின் தலையானது முட்டையின் வெளிப்புறத்தில் இணைக்கப்பட வேண்டும். இணைக்கப்பட்டவுடன், விந்து வெளிப்புற அடுக்கு வழியாக முட்டையின் உட்புறத்திற்கு (சைட்டோபிளாசம்) தள்ளுகிறது. அங்கு கருத்தரித்தல் நடைபெறுகிறது.

சில நேரங்களில் விந்தணுக்கள் பல்வேறு காரணங்களுக்காக வெளிப்புற அடுக்கில் ஊடுருவ முடியாது. முட்டையின் வெளிப்புற அடுக்கு தடிமனாக இருக்கலாம் அல்லது ஊடுருவ கடினமாக இருக்கலாம் அல்லது விந்தணுவால் நீந்த முடியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பங்களில், இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ஐசிஎஸ்ஐ) எனப்படும் ஒரு செயல்முறையை சோதனைக் கருத்தரிப்புடன் (ஐவிஎஃப்) செய்து முட்டையை கருத்தரிக்க உதவுகிறது. ICSI இன் போது, ஒரு விந்தணு நேரடியாக சைட்டோபிளாசம் முட்டையில் செலுத்தப்படுகிறது.

ICSI எப்படி வேலை செய்கிறது?

IVF மூலம் முட்டை கருவுற இரண்டு வழிகள் உள்ளன: பாரம்பரிய மற்றும் ICSI. பாரம்பரிய IVF இல், 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட நீந்திக்கொண்டிருக்கும் விந்தணுக்கள் ஒரு ஆய்வக டிஷில் முட்டைக்கு அடுத்ததாக வைக்கப்படுகின்றன. விந்தணுக்களில் ஒன்று முட்டையின் சைட்டோபிளாஸில் நுழையும் போது கருத்தரித்தல் ஏற்படுகிறது. ஐசிஎஸ்ஐ செயல்பாட்டில், மைக்ரோபிபெட் எனப்படும் ஒரு சிறிய ஊசி, முட்டையின் மையத்தில் ஒரு விந்தணுவை செலுத்த பயன்படுகிறது. பாரம்பரிய IVF அல்லது ICSI மூலம், கருத்தரித்தல் ஏற்பட்டவுடன், கருவுற்ற முட்டை (இப்போது கரு என்று அழைக்கப்படுகிறது) ஆய்வகத்தில் 1 முதல் 5 நாட்களுக்கு வளர்கிறது. பின்னர் அது பெண்ணின் கருப்பைக்கு மாற்றப்படும்.

மேற்கூறப்பட்டுள்ள இந்த முறைகளில் மருத்துவர் பெண்ணின் உடல் நிலை, வயது மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசோதனை செய்து அதனடிப்படையில் ஒரு முறையை பரிந்துரை செய்வார். அந்த முறையை பின்பற்றி குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News