உறவு என்று சொல்லி உணர்வை கொல்லும் வலி..யாருக்கும் வேண்டாம்..!

Hurting Words Quotes in Tamil-எப்போதுமே எதையோ இழந்ததுபோலவே இருக்கிறியே..என்பது ஒருவரது முகத்தைப்பார்த்து முகவரி அறிந்த கேள்வி. ஆம். இழப்புகளில்தான் வேதனை தெரியும்.

Update: 2022-09-12 05:15 GMT

Hurting Words Quotes in Tamil

Hurting Words Quotes in Tamil

கவலை என்பது தானே வருவதில்லை. எல்லோருமே மகிழ்ச்சியாக மட்டுமே வாழ நினைப்பார்கள். கவலையை யாரும் தேடிப்போய் அறுவடை செய்வதில்லை. அது பிறரால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அல்லது ஒருவர் செய்த தவறுகளால் ஏற்பட்ட கவலையாக இருக்கலாம். காதலில் தோல்வி கண்டவர்கள், வேண்டிய அல்லது நேசித்த உறவுகளை பிரியும்போது அல்லது இழக்கும்போது கவலைகள் வரும். அது அவர்களை துன்புறுத்தும். வேதனைப்படவைக்கும். நமது வாசகர்களுக்காக வலிமிகுந்த மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.

மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை..

மரணம் ஒருமுறை தான் கொல்லும்..

மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்..!

சிலரின் மௌனம் திமிரல்ல அவர்களுக்குள் இருக்கும் வலி…!

பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட,பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை…!

ஒருதுளி அன்பை கொடுத்து நூறுதுளி தண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை…!

காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…!

உயிரோடு இருக்கிறேன் ஆனால் உடைந்து இருக்கிறேன் என்னவென்றே தெரியாத பல காரணங்களால்…!

விதியே…..

ஒருநாளாவது என்னை நீ நிம்மதியாக உறங்க வை

அது என் மரணமாக இருந்தாலும் பரவாயில்லை…!

நான் நேசிக்கும் ஒரு உறவும் எனக்கு நிரந்தரமில்லை என்பது கடவுளால் அளிக்கப்பட்ட சாபம் போல…!

நானே வறுமையில் வாழ்கிறேன்…

வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது…!

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல.

நான் ஏமாறும் விதம்தான் புதிது சிலநேரம் அன்பால்…

சிலநேரம் நம்பிக்கையால்…!

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்…!

என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல?

என் இதயமும் உணர்வற்று..உன் நினைவால்..என் உயிர் மட்டும் …வாழுதடி…!

மறக்கத்தான் நினைக்கிறேன் உன்னை முடியவில்லை..

நீ என்னை மறந்து விட்ட போதிலும் கூட..!

நீ அளித்த அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்…

பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கின்றனர்.

உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்..!

எங்கு சென்றாலும் தொடரும் நிலவாய் என்னை எப்போதும் பின் தொடர்கிறது உன் நினைவுகள்…!

மறக்க நினைக்கும் நீயும்…

மறக்க முடியாமல் நானும்...!


விடைபெறாத என் வார்த்தைகளால்..

விடுபட்டு நிற்கிறது என் காதல் உந்தன் முன்…!

கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில்….

காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில்…!


அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள், ஒருநாள் அழவும் வைப்பார்கள்..!

வாழ்க்கையில் மிகப்பெரிய கொடுமை

நாமாகவே கற்பனை செய்து

இன்னொருவரின் மேல் அளவு கடந்த அன்பு வைப்பது…!

உடலுக்கு உயிர் கூட சுமைதான்

நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து சென்றால்…!

ஒரு நாள் நீ நானாக வேண்டும்…!

நான் நீயாக வேண்டும்..!

அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை…

நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம்

நாளை யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த நொடி

அமைதியாக விலகிவிடுவது நல்லது..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News