Comedy Vidukathai in Tamil with Answer-விடுகதைக்கு விடை சொல்றீங்களா?
மறைபொருளாக உள்ள கதையின் பொருளை விடுவிப்பதே விடுகதை. அதாவது பொருளை விடுப்பது ஆகும். இந்த பதிவில் உங்களுக்கு பிடித்தமான விடுகதைகள் தரப்பட்டுள்ளன.;
Comedy Vidukathai in Tamil with Answer
ஓரிரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழந்தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர்.
Comedy Vidukathai in Tamil with Answer
சில விடுகதைகள் நகைச்சுவை தாங்கியும் இருக்கும். அப்படியான விடுகதைகளை படிச்சு பிறருக்கு நீங்களும் இந்த புதிர்களை போடுங்கள்.
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
விடை : வௌவால்
பச்சை கீரை பொரிக்க உதவுவது . வழுக்க உவுதவும் . அது என்ன ?
விடை : பாசி
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன
விடை : கால்குலேட்டர்
பணத்தை அள்ளித் தருவதாக கூறி பணத்தை எல்லாம் அள்ளிகொள்ளும் பூதம் அது என்ன ?
விடை : லாட்ரி சீட்
என் குதிரை கருப்பு குதிரை குளிப்பாட்டினால் வெள்ளை குதிரை? விடை: உளுந்து
Comedy Vidukathai in Tamil with Answer
ஒரு நெல் குத்தி குத்தி வீடெல்லாம் உமியாயிற்று? விடை: தீபம்
ஓட்டிலே வீடு கட்டி உள்ளே உருகட்டி நாட்டாருக்கெல்லாம் நல்ல பொருள் எது? விடை: புளி
மண்ணை சாப்பிட்டு மண்ணிலேயே வந்து மண்ணோடு மண்ணாவான் அவன் யார்? விடை: மண்புழு
கதிரடிக்காத களம் உயிர்ப்பரிக்கும் கலம் அது என்ன? விடை: போர்க்களம்
கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும் தான்? விடை: வெங்காயம்
எப்போதும் காதலர்களின் ரகசியம் கேட்டுக் கொண்டிருப்பவர்? விடை: செல் பேசி
Comedy Vidukathai in Tamil with Answer
இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன? விடை: பட்டாசு
உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன? விடை: தராசு
ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இயலாது அவர்கள் யார்? விடை: எறும்பு கூட்டம்
உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்? விடை: அஞ்சல் பெட்டி
அடி மலர்ந்து நுனி மலராத பூ எது? விடை: வாழைப்பூ
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறேன். அவன் யார் ?
விடை : கடல் அலை
காக்கை போல கருப்பானது கையால் தொட்டால் ஊதா நிறம் வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன? விடை: நாவல் பழம்
Comedy Vidukathai in Tamil with Answer
தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்கு போனால் வெள்ளைக்காரன் அது என்ன? விடை: தேங்காய்
காற்றிலே பறக்கும் கண்ணாடி என்று தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன? விடை: நீர்க்குமிழி
இணை பிரிய மாட்டார்கள் நண்பர்கள் அல்ல ஒன்று சேர மாட்டார்கள் பகைவர்கள் அல்ல? விடை: ரயில் தண்டவாளம்
இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன? விடை: கடிகாரம்
இரவல் கிடைக்காதது இரவில் கிடைப்பது? விடை: தூக்கம்
உருவம் இல்லாதவன் சொன்னதை திரும்பச் சொல்பவன்? விடை: எதிரொலி
உள்ளே இருந்தால் ஓடி திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன? விடை: மீன்
எங்கம்மாள் பிள்ளைத்தாச்சி எங்கப்பன் சுவர் ஏறி குதிப்பான்? விடை: பூசணிக்காய்
Comedy Vidukathai in Tamil with Answer
காற்று வீசும் அழகான மரம் . அது என்ன ?
விடை : சாமரம்
உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வெளியே வந்தால் விரைவில் மடியும் .?
விடை : மீன்
ஓடுமாம் சாடுமாம் ஒற்றைக் காலில் நிற்குமாம். அது என்ன ?
விடை : கதவு
ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை அது என்ன ?
விடை : உள்ளங்கை
கால் இல்லாத மான் வேர் இல்லா புல்லை தின்னும் அது என்ன ?
விடை : மீன் / கடல் பாசி
காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன? விடை: பேனா
வானத்தில் பறக்கும் பறவை இது ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன? விடை: விமானம்
சிவப்பான பெட்டிக்குள் கருகமணி முத்துக்கள் அது என்ன? விடை: பப்பாளி விதைகள்
நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழிகாட்டுகிறான் அவன் யார்? விடை: கைகாட்டி
Comedy Vidukathai in Tamil with Answer
நடலாம் பிடுங்க முடியாது அது என்ன? விடை: பச்சை குத்தல்
நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனே அழ வைப்பேன் நான் யார்? விடை: வெங்காயம்
நடைக்கு உவமை நலனாக்கு தூதுவன் அவன் யார்? விடை: அன்னம்
நாலு மூளை கிணறு நகரத்தின கிணறு எட்டிப் பார்த்தால் சொட்டு தண்ணீர் இல்லை அது என்ன? விடை: அச்சு வெல்லம்
சின்ன தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன? விடை: தீக்குச்சி
தலை மட்டும் கொண்டா சிறை இல்லாத பறவை தேசம் எல்லாம் சுத்தும்? விடை: தபால் தலை
உலகமெங்கும் படுக்கை விரித்து உறங்காமல் அலைகிறான் அவன் யார்? விடை: கடல் அலை
தாடிக்கார அரசனுக்கு காடெல்லாம் சொந்தம் அவன் யார் ?
விடை : சிங்கம்
முன் கால் கையால் இருக்கும். குரங்கல்ல குட்டி வல்லும் இடம் பையாக இருக்கும் அது என்ன ?
விடை : கங்காரு
Comedy Vidukathai in Tamil with Answer
ஆடி ஆடி நடக்கும்அரங்கம் அதிர நடக்கும் அது என்ன ?
விடை : யானை
அடிக்கடி தாவுவான் அரசியல்வாதி அள்ள அவன் யார் ?
விடை : குரங்கு
தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவு பாயுது கப்பல் அவன் யார் ?
விடை : ஒட்டகம்
வெடி வெடித்தும் இடிந்து விழாத கோட்டை அது என்ன ?
விடை : இடி வானம்
ஊரார் அறிந்த காரம் ஊரை அடக்கும் காரம் அது என்ன ?
விடை : அதிகாரம்
வடிக்காத சோறு கொதிக்காத குழம்பு அது என்ன?
விடை : பொங்கல் சட்னி
உலகை எல்லாம் உப்பிட்டு வளர்த்தவர் யார் ?
விடை : கடல்
Comedy Vidukathai in Tamil with Answer
பட்டத்தரசி பவனி வரும்போது பரிகாரங்கள் பக்கத்தில் வரும் அது என்ன ?
விடை: நிலா, நட்சத்திரம்
சின்ன சின்ன பாப்பா குழியில் விழுந்துட்ட அடி படாமல் எழுந்துட்ட அது என்ன ?
விடை : பணியாரம்
கருப்பு மத்தியிலே வெள்ளையென செய்கிறான் அது என்ன ?
விடை : தோசை
பறக்கிறான் குடிக்கிறான் பக்குவமயிட்டன் பந்திக்கு போய்ட்டான் அது என்ன ?
விடை : அன்னம்
கருப்பு குதிரையில் ஒருத்தன் வெள்ளை நிறத்தில் ஏறுவான். இறங்கும்போது சிவந்தவனாக இறங்குவான்.. அது என்ன ?
விடை : தோசை
எங்க வீட்டுக்கு கிணத்துல வெள்ளிக் கிண்ணம் அது என்ன? விடை: நிலா
ஆயிரம் தச்சர் கூடி அமைந்த மண்டபம் ஒருவர் கண் பட்டு உடைந்தது அது என்ன? விடை: தேன்கூடு
கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அது என்ன? விடை: பூட்டு
குலை தள்ளி பலம் தருவேன் குழந்தைகளுக்காக உயிர் விடுவேன் நான் யார்? விடை: வாழை
குண்டன் குழியில் விழுவான் குச்சியப்பன் தூக்கி விடுவான் அது என்ன? விடை: பணியாரம்
Comedy Vidukathai in Tamil with Answer
ராமனுக்கு பிடிக்காத நகை எது ?
விடை : சூர்ப்பனகை
ஐந்தடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? விடை: விரல்கள்
ஒற்றை காலில் உயரமாய் ஆடுவான் ஓய்ந்து விட்டால் படுத்து விடுவான் அவன் யார்? விடை: பம்பரம்
பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன? விடை: கிளி
நடைக்கு உதாரணம் சொல்வார்கள் ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது அது என்ன? விடை: பூனை
கண் மூக்கு காது வாய் இல்லாதமுகம் எது ?
விடை : அறிமுகம்
ஒருவனை மட்டும் அழைக்க மாட்டான் ஊரையே கூட்டி உண்பான் அந்த உத்தமன் பெயர் என்ன? விடை: காகம்
பழகினால் மறக்காதவன். பயந்தோரை விடாதவன் அவன் யார்? விடை: நாய்
அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் பெயர்? விடை சந்திரன்
ஊரார் கண்ட கோலம் உடையவன் காணாத கோலம் அது என்ன? விடை: விதவைக்கோலம்
Comedy Vidukathai in Tamil with Answer
பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன? விடை: மயில்
உடன் வருவான் உதவிக்கு வர மாட்டான் அவன் யார்? விடை: நிழல்
வட்டம், சதுரம் இரண்டில் எது அறிவாளி ?
விடை : சதுரத்திற்கு தான் நான்கு புறம் மூளை இருக்கே.