குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..! குறும்பு செய்து கும்மாளம்போடும்..சுட்டி..!

Child Quotes in Tamil-இயற்கைக் கவிஞன் வடித்த ஒரு அழகான கவிதை, குழந்தை. பிரம்மன் வரைந்த ஓவியம். மகிழ்ச்சி பிறக்கும் சமுத்திரம்.

Update: 2022-09-16 11:19 GMT

Child Quotes in Tamil

Child Quotes in Tamil

நூறுகோடி செல்வங்கள் சேர்ந்து வந்தாலும் எனக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை. என் குழந்தையின் முகத்தை நான் பார்க்காத வரை. ஒரு தந்தைக்கு அல்லது அன்னைக்கு குழந்தையே எல்லாமே. உடற்,பொருள்,ஆவி இப்படி எல்லாவற்றையும் குழந்தைக்கென்று அர்ப்பணிக்கும் உயிர் பெற்றோர் மட்டுமே.

  • உன் புன்னகையை போல் போதையை, கண்டதில்லை இவ் உலகில்..!
  • இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிக முக்கியமான வரம், குழந்தை..!
  • விலைமதிப்பில்லா மனநல மருத்துவர்கள் - மழலைகள்..!


  • உன் ஒவ்வொரு தத்தை நடையிலும் தட்டுத்தடுமாறுவது என் நெஞ்சமும் தான்...
  • தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும், உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்..!
  • எதையோ இழந்தோம் என்று வாழ்ந்திருந்த நமக்கு, இன்று "எதையும் இழக்க தயார் உனக்காக" என்று உணர வைத்தது நம் குழந்தை..!


  • கள்ளம் கபடம் இல்லாத உன் சிரிப்பில், என்னை உன் மன சிறையில் அடைத்து விட்ட கள்ளி நீ..!
  • மழலையின் அழகில் தோற்றது, இயற்கையின் அழகு..!
  • நட்சத்திர சிதறல்கள், இவன் புன்னகையின் எதிரொலிகள்..!
  • கடவுள் அறியா மொழி, மழலையின் அழுகை..!


  • கொஞ்சிக் கொஞ்சி நீ பேசுகையில், கொஞ்சம் குழம்பித்தான் போகிறது என் நெஞ்சம். உன் தத்தை மொழியில் தமிழின் அழகு கூடுதே..!
  • காலையில் உனது புன்னகை மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது..என் முகமோ ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாகிறது..!
  • உன் அர்த்தமில்லா சிறு புன்னகையில் தான் என் வாழ்வின் முழு அர்த்தமும் அடங்கி இருக்கிறது.
  • அறிவாய் ஆறுதல் கூற முடியாத போதும், அழகால் கவலைகளை மறக்கச் செய்பவர்கள் தான் மழலைகள்..!
  • உன் மழலைச் சிரிப்பில், சற்று என்னையே மறந்து போனேன், நானும் குழந்தையாகி நின்று..!


  • மழலை மொழி போல மகிழ்ச்சி ஏதும் இல்லை. மருத்துவமும் ஏதும் இல்லை..! மட்டற்ற ஆசைகள் மட்டுமில்லாமல் மற்றதெல்லாம் கூட தோற்குமே..! மழலையின் புன்னகை மொழியாலே..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News