கருவுக்குள் உரு தந்த தாயே..! என் மனக்கோவிலின் கடவுள் நீயே..!
Amma Pasam Kavithai in Tamil-தாயில்லாத உயிரினங்கள் இந்த பூமியில் ஏதும் இல்லை. மனிதர்கள், பறவைகள்,விலங்குகள், நீர்வாழ் பிராணிகள் என அத்தனைக்கும் தாய் என்பவள் இருப்பாள்.;
Amma Pasam Kavithai in Tamil
Amma Pasam Kavithai in Tamil
அம்மா என்று அழைக்காத உயிர்கள் இல்லை. பேசாத உயிரினம் என்றாலும் கூட தாய் என்பதை தானே அறியும் திறன் உண்டு. இந்த உலகின் உன்னத படைப்பு தாய். அந்த தாயின் உன்னத கவிதைக்ளிக் காணுங்கள்..!
- எத்தனைக் காலங்கள் கடந்தால் என்ன..? எத்தனை ஜென்மங்கள் கடந்தால் என்ன..? உன் அன்பு மட்டும் என்றும் குறையாதே அம்மா...!
- உறவுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்கிறது..ஆனால், உன் உறவுக்கு மட்டும் தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அம்மா...என் மகிழ்ச்சி மட்டுமே உனக்கான எதிர்பார்ப்பு..!
- நான் அழுதபோதெல்லாம் என்னை சிரிக்க வைத்தாய்.. நான் அழுதபோதும் நான் அழுவதுபோல அழுதுகாட்டி என்னை என்னை சிரிக்க வைத்தாய்..! என்றுமே என்னை வெறுக்காத குணம்..உனக்கு..! தவறுகளை மன்னிக்கும் மனம்..! அளவற்ற பாசம்..! ஒப்பற்ற உறவுக்கு நீ மட்டுமே எடுத்துக் காட்டு அம்மா..!
- என் கண்கள் அழுத்தபோதெல்லாம் உன் மனது துடிப்பது ஏனம்மா..? என்னை வாரி அணைக்கத் துடிப்பது ஏனம்மா..? எனக்கு வருத்தம் வரும்போதெல்லாம் உன் மடி சாய்ந்து கொள்ள தேடுவது ஏனம்மா..? எப்படிச் சொல்வேன் என் உணர்வுகளை..!? தாய்க்கு இணையாக வேறுயிர் உண்டோ..?!
- தோட்டத்திற்கு அழகு பூக்கள் என்றால் என் வெற்றிகளுக்கு பின்னால் பெயர் சொல்லாத அழகுடன் என் அம்மா..!
- எனக்கு உயிர் தந்தாய்..! எனை சுமந்தாய்..கருவிலும் தோளிலும்..! உயிர் தந்த உன்னை மறவேனோ தாயே..?
- மகன்களின் இதய ராஜ்யத்தின் உண்மையான ராணி, அம்மா..! அங்கு அரசாள்வது அன்பு மட்டுமே..! அதிகாரங்கள் கூட அன்பாக மட்டுமே வெளிப்படும்..! அது தாய்க்கே உரித்தான குணம்..!
- 'அன்பு' என்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே, தாயே..! 'பாசம்' என்ற சொல்லுக்கு பொருளும் நீயே..!
- கருவறையில் என் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி கொண்டாய்..! நான் எட்டி உதைத்தபோதெல்லாம் அப்பாவிடம் சொல்லிச் சிரித்தாய்..! வளர்பிறையாய் உன் கருவில் வளர்ந்து முழுநிலவாய் பிறந்தேன்..! என்னைத் தொட்டு கொஞ்சிய அந்த தாய்மையின் உணர்வுகள் உனக்குமட்டுமேயானது..!
- பிறக்கும் முன்னே உன் வலி தந்தேன்..! உலகைக்காண்பதற்கு வழி தந்தாய்..! நான் வாழும்போதும் உனக்கு வலி தந்தபோதும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டாய்..எப்படியம்மா..உன்னால் இப்படி முடிகிறது..? நீ தெய்வம் ஆனா பின்னர்தான் உன் அருமை எனக்கு புரிகிறது..!
- உன் தோளில் சாய்த்து என்னை தாலாட்டியபோதெல்லாம் நான் வானத்தில் மிதந்தேன்..! உன் தாலாட்டில் றெக்கைக்கட்டி பறந்தேன்..! சொர்க்கம் என்பது எங்கோ இருக்கு என்றார்கள்..! இல்லையம்மா..உன்னில்தான் சொர்க்கம் இருக்கிறது..!
- கருவறையில் நான் சுகமாக இருக்க நீ வலி உணர்ந்தாய்..! பிறப்பிலும் நான் வலி தந்தேன்..! எத்தனை வலிகள் தாங்கியும் என்னை வளர்த்தாய் அம்மா..உன் சுகங்களை துறந்து என் மகிழ்வினை நினைந்தாய்..! என் நிம்மதி உன் மடிதானம்மா..!
- ஆயிரம் கவிதைகள் எழுதினேன்..நான் கவிஞன் என்று பெருமை கொண்டேன்..! ஆனால், ஒரே வரிக்கவிதையை மறந்தேன்..! ஆமம்மா அந்த ஒரு வரிக்கவிதை அம்மா..! எத்தனை கவிதைகள் படைத்து என்ன பயன்..? அம்மா என்பது உலகினுக்கான கவிதை..!
- நிலாக் காட்டி சோறு ஊட்டும்போது தெரியாது அம்மாவே ஒரு நிலவு என்று..! பூமியைச் சுற்றிவரும் நிலவுபோல அம்மாவைச் சுற்றிவரும் நிலவு நான்..! எதையும் தாங்கும் புவிபோல என் அம்மாவும் ஒரு பூமித்தாய்..!
- அம்மா என்றால் அன்பு..! அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரே உறவு அம்மா மட்டுமே...! உன்னை பிரிந்திருக்கும் கூட சாப்பிட்டாயா மகனே..என்று என்னைப்பற்றிய சிந்திக்கும் ஓருறவு..அது அம்மா..!
- என்னைக் கருவில் சுமந்த தாயே உன்னை என் வாழ்நாள் முழுதும் நான் சுமக்க ஆசை..! ஆனால் நீ தான் என் நிம்மதிக்காக மனைவியோடு சந்தோஷமாக வாழ். நான் தனித்தே இருக்கிறேன் என்கிறாய்..! நீயின்றி என் நிம்மதி எப்படி வாரும் தாயே..?
- நான் கடவுளிடம் மனதார வேண்டுகிறேன். இன்னொரு பிறவியில் மீண்டும் என் தாயவள் எனக்கு மகளாக பிறக்கவேண்டும்..! அவளை நான் என் வயிற்றிலே சுமக்கவேண்டும் என்று..!
- என்ன தவம் செய்தேன் உனக்கு நான் மகனாய் பிறக்க..? என்ன வரம் பெற்றேன் நீ என் தாயாய் வந்திடவே..! அடுத்த பிறவியிலும் இதே வரம் வேண்டும் இறைவா..என் பிரார்த்தனையை நிறைவேற்று..!.
- என்னை உருவாக்கி மறைந்தாய் தாயே..! நீ மண்ணில் இருந்து மறைந்தாலும்.. உன் ஆத்மா என்னை வாழ்த்தி நிற்கும்..அம்மா...!
- நான் வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருந்தாலும் என்னை நீ ஜெயிக்க வைத்துக் கொண்டே தான் இருப்பாய் அம்மா..! உன் துணை இருக்கும்போது எனக்கும் யானை பலம் வரும் தாயே..!
- நான் நோய் என்று படுத்து விட்டால் உன் மடி தேடி நான் அழுவேன்..! ஆனால் நீயோ அந்த நோய்க்கே சாபம் விடுவாய்..! உன் மடி எனக்கு சொர்க்கம் அம்மா.! எத்தனை நோய் வந்தாலும் உன் மடிக்காக நான் தாங்கிடுவேன் தாயே..!
- எத்தனை சாமிகள் என் கண் முன்னே இருந்தாலும் என் கண்களின் முதல் சாமி நீதானே அம்மா...! உன்னை தொழுத பின்னே மற்ற சாமிகளை நான் தொழுவேன்..!
- நான் எத்தனை முறை கீழே விழுந்தாலும் என்னை தூக்கி விட ஓடோடி வருபவள் என்பதறிந்து நீ தூக்கிவிட வேண்டும் என்பதற்காகவே மீணடும் மீண்டும் விழுந்து அழுத காலம் இப்போது என் மனதுக்குள் சிரிப்பை வரவழைக்கிறது அம்மா..! நான் விடுமென்றே விழுகிறேன் என்பது அறிந்தும் கூட என்னைக்கொஞ்சித் தூக்கிய தாயே உன் பெருமையை என்னவென்பேன்..!
- எனக்காக தூக்கம் இழந்தாய்..உணவு இழந்தாய்..நிம்மதி இழந்தாய்..! இன்னும் எனக்கா இழப்பதற்கு என்ன வைத்திருக்கிறாய் தாயே..? நீ தியாகத்தின் மறு உரு. உனக்காக நான் என்ன செய்யப் போகிறேன் அம்மா..!?
- கடவுள் தந்த உயிர் என்று சொல்லவா..? இல்லை கடவுளுக்கும் கடவுளான என் அன்னை தந்த உயிர் என்று சொல்லவா..? ஆம் தாயே..கடவுளுக்கும் தாய் இருக்கிறாள்..!
- ஒப்பில்லா உயிரும் நீயே..! நிகரில்லா என் சுவாசமும் நீயே..என் மனம் தினம் தேடி ஏங்கும் அன்பும் நீயே அம்மா..நீயில்லாத ஒரு உலகை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை தாயே..!
- உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே.. உன்னைப் பற்றி எழுதாமல் நான் எழுதும் எழுத்துக்கள் தான் கவிதை ஆகுமா..? அம்மா என்பதே ஒற்றைச் சொல் கவிதைதான்..?!
- பிறக்கும் போது உன் வலியை உணர்ந்து தான் நான் அழுதேனோ..என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது..! அதனால் இனிமேல் உன்னை அழ விடமாட்டேன் தாயே..!
- உன் பசி மறந்து எனக்கு பசியாற்றினாய்..! உன் தூக்கம் மறந்து என்னைத் தூங்கவைத்தாய்..! உன் மகிழ்ச்சி மறந்து என்னை மகிழ்ச்சிப்படுத்தினாய்..! எல்லாம் நான் அழைக்கும் அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்காக..!
- வேகம் விவேகமெல்ல என்பதைக் கற்றுத் தந்தாய் தாயே..உன் விரல்பிடித்து உன் பின்னால் நான் நடந்தேன்..தள்ளாடிய நடை உறுதியானது..நம்பிக்கை தந்தாய் தனியாக நான் நடக்க..!
- உன் பிள்ளை அழகு என்று ஊரெல்லாம் சொல்ல..திருஷ்ட்டிப் பட்டுப்போகும் என்று என் கன்னத்தில் கருப்பு போட்டு வைத்தாய்..! கள்ளமற்ற என் சிரிப்பில் உச்சி முகர்ந்தாயே என் உள்ளமெல்லாம். மகிழ்ந்துபோக..! அந்த நாட்கள் மீண்டும் எனக்கு வராதா என்று ஏங்கிக்கிடக்கிறேன்..தாயே..!
- என் சிறுவயதில் உன் விறல் பிடித்து திருவிழா கடைவீதியில் நடந்து வந்த காலங்களில்...பஞ்சுமிட்டாய் கேட்டு நான் அழுதபோது எத்தனை வேண்டுமென்று உச்சி முகர்ந்தாயே என் தாயே..அந்த பஞ்சுமிட்டாயைவிட உன் அன்பு நிறைந்த முத்தங்கள் இனிக்குதம்மா இன்றுவரை..!
- கடலின் ஆழம் பெரிதா..? உயர்ந்து நிற்கும் இமயமலை பெரிதா..? இல்லை இல்லை நீ காட்டும் பேரன்பே இவ்வுலகில் எனக்கு பெரிதென்பேன்..தாயே..!
- நீ திட்டி நான் அழுததில்லை, நீ அடித்தும் எனக்கு வலித்ததில்லை, வலிக்காமல் அடிப்பதற்கு எங்கு நீ கற்றாய் அம்மா..? மனதை உடைக்கத்தெரியாத உன்னதம் நீ மட்டுமே அம்மா..!
- எத்தனை உறவுகள் வந்து, அத்தனை அன்பினை பொழிந்தாலும் உன் ஒரு உயிர் அன்பிற்கு ஈடாகுமா அம்மா..? பல ரூபாய் கோடிகள் கொடுத்து தான் எத்திசையில் தேடி வந்தாலும், ஏன் ஆயிரமாயிரம் அன்பை பொழிந்தாலும், அது தாய் அன்பிற்கு ஈடாகுமா!
- தோல்விகள் என்னைத் துரத்தியபோதெல்லாம்..வெற்றியாய் என்னைத் தாங்கினாய், தன்னம்பிக்கையாக வந்து..! உன் மடி போதும் எனக்கான நம்பிக்கை பெற..! என் தலை சாய்ந்து இளைப்பாறும் இடம் அதே மடிதானம்மா..!
- ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ ஆசைகள் நீ சுமந்தாய்..! அத்தனையும் உனக்காக அல்ல தாயே.. எனக்காக தானே அம்மா..!?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2