Thirukkural for Kids குழந்தைகளுக்கான எளிமையான திருக்குறள்

வாழ்க்கையில் நல்வழியில் செல்ல குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் எளிமையான திருக்குறள்கள்

Update: 2024-01-18 07:03 GMT

எளிமையான திருக்குறள்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் திருக்குறளில் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். வாழ்க்கையில் நல்வழிக்கு செல்ல வேண்டும் என்றால் தினமும் ஒரு திருக்குறளை படியுங்கள். இந்த பதிவில் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் எளிமையான திருக்குறளை பதிவு செய்துள்ளோம்

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்

குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு

குறள் 26:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

குறள் 71:

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புண்கணீர் பூசல் தரும்

குறள் 72:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

குறள் 74:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு

குறள் 80:

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

குறள் 90:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

குறள் 100:

இனிய உளவாக இன்னாத கூறல் கனி

இருப்பக் காய்கவர்ந் தற்று

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது

குறள் 102:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

குறள் 103:

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது

குறள் 104:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்

குறள் 108:

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

குறள் 110:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

குறள் 121:

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்

குறள் 127:

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

குறள் 129:

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

குறள் 131:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

குறள் 202:

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

Tags:    

Similar News