தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-12-22 14:36 GMT

தமிழகத்தில் நாளை (டிச.23)முதல் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை.ஜன.2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிந்ததை அடுத்து நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நடப்பாண்டில் டிசம்பர் 7,8ம் தேதி நடக்க இருந்த அரையாண்டு தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தால் மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதால் மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்தன. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. மேலும், 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் பள்ளிகள் திறந்த பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மற்ற மாவட்டங்களில் நடைபெற்று வந்த தேர்வுகள் இன்று முடிவடைந்து உள்ளது நாளை (23ம் தேதி) முதல் ஜனவரி 1ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று மாலையுடன் தேர்வு முடிந்து விட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் வருகிறது. அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News