தமிழகத்தில் ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-25 07:00 GMT

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் நடந்து முடிந்து , மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோருக்கு மட்டும் வரும் 30ம் தேதி வரை  தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில், வரும் 2022- 23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். 
அதன்படி,  1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 11ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு ஜூன் 27ம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளன. மேலும், 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 20ல் வகுப்புகள் திறக்கப்படும் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்,  2023 ஆம் ஆண்டு மார்ச் 13 -ஆம் தேதியும், 2023 மார்ச் 14 -ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வும் தொடங்குகின்றன. 2023 ஏப்ரல் 3 -ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டில் வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் எனவும் அன்பில் மகேஷ் அறிவிதுள்ளார்.
Tags:    

Similar News