மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம்: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-30 10:30 GMT

பைல் படம்.

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாணவிகள் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

Tags:    

Similar News