10, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்பணி இன்று தொடக்கம்

தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

Update: 2022-06-01 03:30 GMT

கொரோனா பெருந்தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதேபோல், பொதுத்தேர்வு எழுதும் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெற்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மே 5ல் துவங்கி, மே 28 ம் தேதி நிறைவு பெற்றது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ல் தொடங்கி, மே 30 வரை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதில், 11ஆம் வகுப்புக்கு மட்டும் விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 9-ம் தேதி ஆரம்பமாகிறது. 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது.

இப்பணிகள் நிறைவு பெற்று, 10-ம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News