அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு ஜூன் 1 தொடங்குகிறது

Update: 2023-05-24 11:32 GMT

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு 3 லட்சத்து 14666 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் வாரியாக விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. ஒரு லட்சத்து 7395 மொத்த இடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருப்பதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தான் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நாளை (25-ம் தேதி) அனுப்புகிறது. அதனை கல்லூரி முதல்வர்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டி வெளியிடுவார்கள். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலைக் கல்லூரிகளுக்கும் தனித்தனியாக தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும்.

இதையடுத்து 29-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. 31-ம் தேதி வரை மூன்று நாட்கள் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு இக்கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 1- முதல் 10 வரை முதல் பொது கலந்தாய்வு நடக்கிறது. 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரண்டாவது கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22 வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News