அரசு இசைப்பள்ளியில் மாணவ - மாணவியர்களுக்கான சேர்க்கை ஆரம்பம்

இலவச புத்தகம், மிதி வண்டி, இலவச பஸ்பாஸ், சலுகை கட்டணத்தில் ரயில் பயணம், ஊக்கத் தொகை மாதம் ரூ 400/- வழங்கப்படும்.

Update: 2021-10-02 09:57 GMT

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை ஆரம்பமாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு இசைப்பள்ளியில் மிகத்திறமை வாய்ந்த கலை ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்க படுகிறது.

இது குறித்த விபரங்கள் : 

கல்வித்தகுதி :

குரலிசை, வயலின், மிருதங்கம் பயில குறைந்த பட்சம் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாதஸ்வரம், தவில், தேவாரம் பயில எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கல்விக் கட்டணம் : ஒரு ஆண்டுக்கு ரூபாய் 150/- மட்டும்.

பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாவட்ட அரசு இசைப்பள்ளி, கலை பண்பாட்டு வளாகம், 870/21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு,

திருநெல்வேலி – 627007. 

இந்த பள்ளியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவியருக்கு இலவச புத்தகம், மிதி வண்டி, இலவச பஸ்பாஸ், சலுகை கட்டணத்தில் ரயில் பயணம் செய்ய வசதி உண்டு. மூன்று வருட படிப்பில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை மாதம் ரூ.400/- வழங்கப்படும்.

இசைப்பள்ளியில் பயிற்றுவிக்கும் கலைகள் மற்றும் அட்மிஷனுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் விபரம் :

குரலிசை – 9894096044

நாதஸ்வரம்- 9944545381

தவில் – 6380691427

தேவாரம் – 9952258281

பரதநாட்டியம் – 9442893006

வயலின் – 8220399258

மிருதங்கம் - 8124105050


Tags:    

Similar News