தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,645 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3, 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் தொற்றுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர் என சகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,124 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,804 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 1,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,56,359 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,809 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,68,722 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 25,598 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.