கால் பந்தாட்ட வீரரால் பெரும் இழப்பை சந்தித்த கோகோ கோலா நிறுவனம்

ரொனால்டோ, கோகோ கோலா பாட்டில்களை தள்ளிவிட்டு தண்ணீர் பாட்டிலை காட்டுகிறார்.
ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த பரபரப்புக்கிடையே இன்னொரு பரபரப்பு போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோவினால் பற்றிக்கொண்டிருக்கிறது.
இந்த தொடரில் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ‛தண்ணீரை குடிங்க' என்று மேஜை மீது இருந்த கோகோ கோலா பாட்டிலை தள்ளி வைத்தார். இவாறு ஒரு பிரபல வீரர் செய்ததால் கோகோ கோலாநிறுவனத்திற்கு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான மதிப்பு சரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்னதாக கோகோ கோலா குளிர்பான பாட்டில்கள் இருப்பதைப்பார்த்த ரொனால்டோ, அந்த பாட்டில்களை தள்ளி வைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்தார். ‛அகுவா' (போர்ச்சுக்கீசிய மொழியில் அகுவா என்றால் தண்ணீர் ஆகும் ) என்று கூறி குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீரை குடிக்கவேண்டும் என்பதை சைகையில் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. கோகோ கோலா குளிர்பானத்தை பிரபல கால்பந்து வீரர் ஒருவர் தள்ளிவிட்டதால், அந்த நிறுவனத்திற்கு எதிரான விளம்பரமாக பரவியது. இதன் எதிரொலியாக, கோகோ கோலா நிறுவனத்திற்கு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.29ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu