/* */

சிறு வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்சாய் பிறந்தநாள்

அடிப்படை உரிமையான கல்வியைத் தடுக்க தாலிபான்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? இந்த கேள்வியை கேட்கும் பொழுது மலாலா யூசுஃப்சாய் வயது 11.

HIGHLIGHTS

சிறு வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்சாய் பிறந்தநாள்
X

மலாலா யூசுஃப்சாய்


அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்சாய் பிறந்தநாள் இன்று...

மலாலா யூசுஃப்சாய் - 1997 ஜூலை 12 ம் நாள் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய். பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபான்கள் பெண்கள்படிக்கக் கூடாது, தெருக்களில் நடமாடக்கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனை எதிர்த்த மலாலா என் அடிப்படை உரிமையான கல்வியைத் தடுக்க தாலிபான்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? என கேள்வி கேட்டாள். இந்த கேள்வியை கேட்கும் பொழுது அவளின் வயது 11.

அடுத்த ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம் பெண்களின் கல்வி பற்றிய கட்டுரையை ஒரு பெண் குழைந்தையே எழுதினால் சிறப்பாக இருக்கும் என கருதியது. எனவே ஜியாவுதீன் பள்ளியில் இருந்து ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்தனர். ஆனால் அக்குழந்தையின் பெற்றோர்கள் அதற்கு தயக்கம் காட்டினர்.

பின்னர் ஜியாவுதீன் தன் மகளையே எழுத வைத்தார். முதலில் தன்னை அடையாளம் காட்டாமல் எழுதத்தொடங்கிய மலாலாவின் கட்டுரைகள் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. பின்னர் பொது இடங்களில் பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை தைரியமாக எடுத்துரைத்தார். இதனால் தாலிபான்களின் தாக்குதலுக்கு ஆளானார்.

அக்டோபர் 9, 2012ம் ஆண்டு தாலிபான்கள் இவரை சுட்டனர். படுகாயமடைந்த மலாலா, பிரிட்டன் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று பின் குணமடைந்தார். பின் பிரிட்டனிலேயே தன் பள்ளி படிப்பை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. மிகவும் சிறு வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே ஆவார்.

Updated On: 12 July 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    மதுரையில் புரோட்டா மாஸ்டர் பயிற்சி பள்ளி..! சர்வதேச உணவான புரோட்டா..!
  2. தென்காசி
    8 நாட்களுக்குப் பின் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில்...
  3. கடையநல்லூர்
    தமிழக - கேரளா எல்லையில் பிடிபட்ட 12 அடி ராஜ நாகம்
  4. கல்வி
    உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்
  5. திருப்பரங்குன்றம்
    சோழவந்தான் ஆலயங்களில் வைகாசி திருவிழா..!
  6. கல்வி
    அறிவியல் மாணவர்களுக்கான 10 தொழில் வாய்ப்புக்கள்
  7. இந்தியா
    இந்தியாவில் கொடி கட்டிப்பறக்கும் உணவுத்துறை
  8. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே பலத்த மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்