காவிரி ஆற்றில் மூவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி ஆற்றில் மூன்று தனித்தனி சம்பவங்களில் மூவர் உயிரிழந்தனர். வள்ளிபுரத்தான்பாளையத்தை சேர்ந்த 62 வயதுடைய சம்பத், மனநிலை பாதிப்புடன் தனியாக வாழ்ந்து வந்தவர். தற்கொலை எண்ணத்தில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் தரிசனத்துக்குப் பிறகு, காவிரியில் மூழ்கி உயிரை மாய்த்தார்.
மற்றொரு சம்பவமாக, கொடுமுடி அருகே 70 வயது கூலி தொழிலாளி தர்மலிங்கம், குளிக்க சென்ற இடத்தில் காணாமல் போய், ஒரு நாள் கழித்து அவரது சடலம் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான நிஷாந்த், தனது நண்பர்களுடன் சோழசிராமணியில் காவிரியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவங்கள் காவிரி ஆற்றின் ஆபத்தை நினைவுபடுத்தும் வண்ணம் உள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu