நாட்டில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: விழிப்புணர்வு அவசியம்!

நாட்டில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: விழிப்புணர்வு அவசியம்!

சைபர் கிரைம் - காட்சி படம் 

தேசிய குற்றப்பதிவியல் காப்பகம் வெளியிட்ட தகவலில், நாட்டிலேயே தெலங்கானாவிலும் கர்நாடகத்திலும் அதிக சைபர் குற்றங்கள் நடக்கிறது

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் ஒரு பக்கம் கையில் பணம் வைத்திருக்க வேண்டாம், ஆபத்தில்லை என்பதை முன்னெடுத்து விளம்பரப்படுத்தப்பட்டாலும்கூட, அதற்கு இணையாக சைபர் குற்றங்கள் மக்களின் சொற்ப வருமானத்தைப் பிடுங்கித் தின்றுகொண்டிருக்கின்றன.

இணையம் நம் வாழ்க்கையை எளிதாக்கியிருந்தாலும், அதன் மறுபக்க அபாயங்களையும் நாம் மறக்கக்கூடாது. சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடுவது, ஆபாச படங்களை பரப்புவது, சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவது போன்றவை சைபர் குற்றங்களில் அடங்கும்.

சிலரது வாழ்நாள் சேமிப்பு, சிலரது ஒருமாத ஊதியம் என எதையும் விட்டுவைப்பதில்லை இந்த சைபர் மோசடியில் ஈடுபடுவோர்.

நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. 2020ஆம் ஆண்டு 50,035 ஆக இருந்தது, 20222ஆம் ஆண்டு 65,893 ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் வெளியான தேசிய குற்றப்பதிவியல் காப்பகம் வெளியிட்ட தகவலில், நாட்டிலேயே தெலங்கானாவிலும் கர்நாடகத்திலும் அதிக சைபர் குற்றங்கள் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்:

• பண இழப்பு: நமது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்.

• தனிப்பட்ட தகவல் திருட்டு: நமது ஆதார் எண், பாஸ்போர்ட் எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அதன் மூலம் மோசடி செய்யப்படலாம்.

• மான நஷ்டம்: நமது பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் தவறான செயல்கள் செய்யப்படலாம்.

• மன அழுத்தம்: சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் முறையே 15,297 மற்றும் 12,556 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இன்னமும் பதிவாகாத குற்றங்கள் எவ்வளவு இருக்கும் என்பது மோசடியாளர்களுக்கே வெளிச்சம்.

இதையடுத்து, மத்திய உள்துஐற அமைச்சகம் ஏழு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்கி, அதிக மோசடிகள் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு சிறப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுளள்து.

அதிக மோசடிகள் நடக்கும் இடங்களில் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மோசடியாளர்களிடமிருந்து மக்களைத் தப்புவிக்க வழி ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதுவரை மக்களிடமிருந்து வந்த 4.7 லட்சம் புகார்களில் நடவடிக்கைகள் மூலம் சுமார் 1,200 கோடி மக்கள் பணம் மீட்கப்பட்டுள்ளது. 1930 என்ற தொலைபேசி எண் மூலம் மக்கள் உடனடியாக சைபர் குற்றங்கள் குறித்துதகவல் அளித்துப் பயன்பெறலாம் எனவும், இதுவரை 3.2 லட்சம் சிம் கார்டுகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களை தடுக்க:

  • வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள்.
  • பொதுவில் உள்ள Wi-Fi இணைப்புகளை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்.
  • தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் மற்றும் செய்திகளை திறக்காதீர்கள்.
  • உங்கள் கணினி மற்றும் மொபைல் சாதனங்களில் சமீபத்திய பாதுகாப்பு மென்பொருளை நிறுவவும்.
  • சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு பெறவும்.

சைபர் குற்றங்கள் பற்றி புகார் அளிக்க:

• உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

• இந்திய இணைய குற்றப் பிரிவு (Cyber Crime Cell) இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

• 155260 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

சில பயனுள்ள இணைப்புகள்:

• இந்திய இணைய குற்றப் பிரிவு (Cyber Crime Cell): https://www.fbi.gov/investigate/cyber

• தேசிய சைபர் பாதுகாப்பு ஆணையம் (National Cyber Security Agency): https://www.nsa.gov/Cybersecurity/

சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு பெற்று, உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Tags

Next Story