/* */

விருதுநகரில் சிலிண்டர் கியாஸ் கசிவினால் தீப்பற்றி எரிந்து பெண் காயம்

விருதுநகரில் சிலிண்டர் கியாஸ் கசிவினால் தீப்பற்றி எரிந்து பெண் காயம் தீக்காயம் அடைந்தார்.

HIGHLIGHTS

விருதுநகரில் சிலிண்டர் கியாஸ் கசிவினால் தீப்பற்றி எரிந்து பெண் காயம்
X

விருதுநகரில் கியாஸ் கசிவினால் பெண் தீக்காயம் அடைந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால்நகர் சின்னக்காளை தெருவில் வசிப்பவர் பாலாஜி. மாட்டுத்தீவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா சங்கீதா (46). வழக்கம்போல் காலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் தீ பற்றி எரிந்தது.

இதில் சமையல் செய்து கொண்டிருந்த மீனா சங்கீதா பலத்த காயமுற்று அலறினார். பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட மீனா சங்கீதாவை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு