விருதுநகரில் கொரோனோவிற்கு பெண் ஊராட்சி மன்ற தலைவி பலி

X
By - A.Stalin, Reporter |18 May 2021 11:01 AM IST
கொரோனா தொற்று - ஊராட்சி மன்ற தலைவி பலி.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட பாவாலி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ராதாதேவி (வயது 36). இவர் தொடர்ந்து கொரோனோ தடுப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இந்தநிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். களப்பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu