விருதுநகர்: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க குறியீடு நிர்ணயித்து பணியாளர்களை கண்ணிய குறைவாக நடத்த கூடாது, மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிடும் வாய்மொழி உத்தரவை தமிழக அரசாங்கம் கைவிட வேண்டும், தமிழக அரசாணைப்படி பணியாளர்களுக்கு ஒய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் எனவும், பொங்கல் தொகுப்பு பேக்கிங் செய்து வழங்கிடவேண்டும் என்றும், மேலும் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் எனவும், பொது பதவிந்தரத்தை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business