/* */

பொது முடக்கத்தால் உளுத்தம்பருப்பு விலை உயர்வு

பொது முடக்கத்தால் உளுத்தம்பருப்பு விலை உயர்வு
X

வெளி மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் விருதுநகர் சந்தையில் உளுத்தம்பருப்பு விலை உயர்ந்துள்ளது.

மும்பை, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து விருதுநகர் பருப்பு ஆலைகளுக்கு உளுந்து, பாசிப்பருப்பு, மசூர் பருப்பு உள்ளிட்ட அனைத்து வகையான பருப்புகளும் கொண்டுவரப்பட்டு பின்னர் இங்குள்ள பருப்பு ஆலைகளில் அரவை செய்து சமையலுக்கு பயன்படுத்தும் வகையில் பக்குவப்படுத்தப்பட்டு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு, உளுந்து வகைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது. விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.50 அதிகரித்து.2750 ரூபாய்க்கும், நல்லெண்ணெய் ரூ.3700 ரூபாய்க்கும் சன்பிளவர் எண்ணெய் ரூ.2800, பாமாயில் ரூ.50 அதிகரித்து ரூ.2100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

மசூர் பருப்பு பருவட்டு ரூ.7800 ரூபாய்க்கும், உருட்டு உளுந்து நாடு வகை ரூ.300 அதிகரித்து ரூ.10,500ரூபாய்க்கும், பர்மா வகை ரூ.300 அதிகரித்து ரூ.9500 ரூபாய்க்கும், 100 கிலோ தொழி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.200 அதிகரித்து ரூ.9000 ரூபாய்க்கும், 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.200 அதிகரித்து ரூ.9600 ரூபாய்க்கும், பட்டாணி பருப்பு ரூ.150 அதிகரித்து ரூ.6500 ரூபாய்க்கும், வெள்ளை பட்டாணி 100 கிலோ ரூ.150 அதிகரித்து ரூ.6600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

ஒரு குவிண்டால் நாட்டு வத்தல் ரூ.1000 குறைந்து ரூ.9000 ரூபாய்க்கும், ஆந்திரா ஏ.சி.வத்தல் 1000 ரூபாய் விலை குறைந்து ரூ.9000 ரூபாய்க்கும், முண்டு வத்தல் ரூ.20,000 -ரூ.25,000 ரூபாய்க்கும், மல்லி நாடு 40 கிலோ ரூ.4000- 4200க்கு விற்பனையாகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பகலில் மட்டுமே மில்களில் பருப்பு உளுந்து பணிகள் நடப்பதால் அதன் வரத்து குறைவாலும் இவற்றின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Updated On: 18 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?