மணல் அள்ளிய லாரி பறிமுதல்

மணல் அள்ளிய லாரி பறிமுதல்
X
காரியாபட்டி அருகே மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது

மணல் அள்ளிய லாரி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது

காரியாபட்டி அருகே கரிசல் குளம் பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரிசல்குளம் காட்டுப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திருடப்பட்டு கொண்டிருந்ததை கண்ட போலீசார் லாரியின் அருகே சென்றனர்.

அப்போது போலீசார் வருவதை அறிந்து மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதன்பின்பு போலீசார் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து காரியாபட்டி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story
ai in future agriculture