/* */

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேன் - ஆட்டோ மோதல்: ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேன் - ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேன் - ஆட்டோ மோதல்: ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்
X

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொதுமக்கள்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மங்காபுரம் தெருவைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் லோடு ஆட்டோவில் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிருஷ்ணன் கோயில் நோக்கி தனியார் பட்டாசு ஆலை வேன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் விளக்கில் வேனும், லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் வேலுச்சாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவருடன் வந்த செல்வகுமார் மற்றும் பட்டாசு ஆலை வேனில் வந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் செல்வ குமார் என்பவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால் மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 2:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. இந்தியா
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு