ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் பணம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பறக்கும் படை  வாகன சோதனையில் பணம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பறிமுதல் செய்த பணம்.

இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் உரிய ஆவணம் இல்லாத 1,12, 140 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஞானராஜ் என்பவரின் இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணம் இல்லாத ரூ. 1,12140 பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் தொடர் விசாரணை மேற்கொண்டது. ஞானராஜிடம் தனியார் வங்கி ஊழியர் எனவும் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக சென்றதாகவும் கூறப்படுகிறது. பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story