/* */

ஆவின் பால் வாகனத்தை சிறைபிடித்த பால் உற்பத்தியாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் பால் வாகனத்தை சிறை பிடித்து, பாலை கீழே கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.

HIGHLIGHTS

ஆவின் பால் வாகனத்தை  சிறைபிடித்த பால் உற்பத்தியாளர்கள்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் கிராமத்தில் மூன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கங்களின் மூலம் நாள்தோறும் சுமார் 800 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யவும் பாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்திற்கு இவர்கள் கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இங்கு உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கடந்த 20 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்காத நிலையில் இன்று தங்கள் பகுதிக்கு வந்த ஆவின்பால் வாகனத்தை சிறைபிடித்த உற்பத்தியாளர்கள், பாலை கீழே கொட்டி போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டக்காரர்களின் பாலை ஆவின் நிர்வாகம் பெற்றுக்கொண்டது. இதை தொடர்ந்து ஆவின்பால் வாகனம் விடுவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 9 May 2021 5:10 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி