/* */

வத்திராயிருப்பு பகுதியில் மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியல்

வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வத்திராயிருப்பு பகுதியில் மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியல்
X

நெல் மூட்டைகளை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, கோட்டையூர், உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதியில் சுமார் 7400 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் தற்போது அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் பட்டா வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து கால தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. 10 நாட்களுக்கு மேலாகியும் கட்டுப்பாடுகள் காரணமாக நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வத்திராயிருப்பு வருவாய் துறை அலுவலகம் முன்பு மூட்டைகளை சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனே கொள்முதல் செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் தெரிவித்த நிலையில் காவல் துறையினர் விவசாயிகளை வருவாய்த் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 24 Jan 2022 9:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்