/* */

தேர்தல் பணிக்கு சென்றவர் வீட்டில் கொள்ளை

தேர்தல் பணிக்கு சென்றவர் வீட்டில் கொள்ளை
X

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பணிக்கு சென்று இருந்தவரது வீட்டை உடைத்து இருவேறு பகுதிகளில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரை சேர்ந்த ஸ்ரீராம் என்ற ஆசிரியர் தேர்தல் பணிக்காக சென்றிருந்ததால் வீட்டைப் பூட்டி விட்டு அவரது மனைவி, குழந்தைகளுடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை வீடு திரும்புகையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 சவரன் தங்க நகை வெள்ளிப் பொருட்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் களவு போனது தெரியவந்தது. இது குறித்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் ரோட்டில் அமைந்துள்ள மகாத்மா நகரில் தனியார் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் இளங்கோவன் என்பவர் தேர்தல் பணிக்கு சென்றிருக்கும் போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தனர். இதை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 59 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 50,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 8 April 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...