/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி செயலரிடம் ரூ.6.50 லட்சம் பறிமுதல்

ஸ்ரீ வில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி செயலாளரிடமிருந்து ரூ.6.50லட்சம் பணம் பறிமுதல்

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி செயலரிடம்  ரூ.6.50 லட்சம் பறிமுதல்
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி செயலாளர் பணம் வினியோகம் செய்யும்போது பிடிபட்டார். அவரிடமிருந்து 6.58 லட்சம் லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் 9வது வார்டு பகுதியில் அதிமுக மகளிர் அணி செயலாளர் கவிதா மற்றும் அவரது தந்தையிடம் இருந்து 3.30லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் 4 பேரை விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் விதமாக பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நகர் மற்றும் கிராமப்புறங்களில் பகல் மற்றும் இரவு நேரம் சோதனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு சோதனை செய்யும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் 9வது வார்டு ரைட்டம்பட்டி பகுதியில் ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதிகாரிகளை பார்த்தவுடன் பணம் வழங்கிக் கொண்டிருந்த சில ஆண்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து அங்கு இருந்த அதிமுக மகளிர் அணி செயலாளர் கவிதாவிடம் விசாரணை செய்தபோது அவரிடம் இருந்து ரூபாய் 3.28லட்சம், பூத் ஸ்லிப் நோட்டீஸ் மற்றும் இரட்டை இலை பதிக்கப்பட்ட அட்டைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரை வீட்டில் வைத்து விசாரிக்கும் போது அவர் வீட்டில் உள்ள ஒரு அறையின் கதவை கவிதா திறக்க மறுத்து விட்டார். அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அந்த ரூமிற்கு சாவி இல்லை என்று மழுப்பலாக பதில் சொல்லிவிட்டார். நீண்ட வாக்குவாதத்திற்குப்பிறகு அறையின் கதவைத்திறந்து உள்ளே சென்ற அதிகாரிகள் அறையை சோதனை செய்தனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 3.30லட்ம் பணத்தை பறிமுதல் செய்தனர். கவிதாவின் தந்தை பரமசிவம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த அதிகாரிகள் மொத்தமாக 6.58 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 April 2021 7:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  2. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  3. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  4. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  7. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்