சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு நாளை (14 )முதல் (17)வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி . இந்நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு நாளை (14 )முதல் (17)வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பக்தர்கள் இரவு நேரங்களில் மலையில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu