தந்தைக்காக மகள் தீவிர வாக்கு சேகரிப்பு

தந்தைக்காக மகள் தீவிர வாக்கு சேகரிப்பு
X

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவிற்கு கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் சார்பில் மாதவராவ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவிற்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி வேட்பாளரின் மகள் திவ்யா , வ.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாதவராவ் உடல்நிலை சரியில்லாமல் 5 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!