பைக்கில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது

பைக்கில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பைக்கில் கடத்தி வந்த பத்தே முக்கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார் பைக்கில் மூன்று பேர் வந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்கையில் சில்லறை விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 10 கிலோ 750 கிராம் கஞ்சாவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த மாரீஸ்வரன், திருப்பதி, விஜயகுமார் ஆகிய மூவரை கைது செய்த வன்னியம்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future education