ஆவணங்களின்றி எடுத்து சென்ற 3 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற 3 லட்சம் பறிமுதல்
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 3 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பண்டிதன்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக மோட்டார்பைக்கில் வந்த அப்பையநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவபாலன் என்பவரிடம் சோதனை நடத்தினர். அவரது பைக்கில் உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 3 லட்சம் பணம் இருப்பதை கண்ட தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி