/* */

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 1½ வயது சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒன்னரை வயது சிறுவன் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 1½ வயது சிறுவன் உயிரிழப்பு
X

மருத்துவமனையில் கதறி அழும் சிறுவனின் உறவினர்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஒன்னரை வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழப்பு. நகர் காவல் துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பராஜ் இவரது தாய் தந்தை திருப்பதி ராசாத்தி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூலித்தொழிலாளி சுப்பராஜின் ஒன்னரை வயது சிறுவன் அன்புசெல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மடவார்வளாகம் பகுதியில் அவர்களது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் லாரியின் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஒன்னரை வயது சிறுவன் அன்புச்செல்வன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த சிறுவனின் தாத்தா,பாட்டி இருவரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெளி மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் இசால் விட்டால் தாபேயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது