/* */

சதுரகிரி மலைக்கு இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

சதுரகிரி மலைக்கு இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சதுரகிரி மலைக்கு இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி
X

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து, தொடர்ச்சியாக 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். நாளை (28ம் தேதி) திங்கள் கிழமை, மாசி மாத தேய்பிறை பிரதோஷம் நாளை முன்னிட்டு, பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை பிரதோஷம், செவ்வாய் கிழமை மகா சிவராத்திரி, புதன் கிழமை மாசி மாத மகா அமாவாசை என முக்கிய விசேஷமான நாட்களாக இருப்பதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். குறிப்பாக மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து ஏராளமாக பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்த மாவட்டங்களிலிருந்து, அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. மகா சிவராத்திரி மற்றும் மாசி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. சதுரகிரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 5:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  3. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  4. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  5. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  6. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  7. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  8. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  9. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  10. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது