ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றிலிருந்து மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டி ஆத்தங்கரைபட்டியைச் சேர்ந்தவர் பூலம்மாள். இவர் சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாபட்டி காவல்நிலைய போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி