/* */

சிவகாசி தீப்பெட்டி ஆலையில் பயங்கரத்தீ: உயிர்தப்பிய தொழிலாளர்கள்

சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

HIGHLIGHTS

சிவகாசி பைபாஸ் சாலையில், பிரபல ஹிந்து தீப்பெட்டி ஆலை உள்ளது. வழக்கம்போல் இங்கு தானியங்கி இயந்திரம் மூலம், தீக்குச்சியில் ரசாயன மருந்து செலுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். விபத்து தகவல் அறிந்ததும், தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில், சுமார் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தீக்குச்சி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்