/* */

சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்த காவல் ஆய்வாளர்.

சிவகாசியில் சுகாதார ஆய்வாளருக்கு ஊரடங்கை மீறியதாக காவல் உதவி ஆய்வாளர் அபராதம் விதித்துள்ளார்

HIGHLIGHTS

சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்த காவல் ஆய்வாளர்.
X

சிவகாசி ஆலமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ். இவர் பணி நிமிர்த்தமாக மார்க்கெட் சாலையில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஊரடங்கை மீறி வெளியே வந்ததாக 500 ரூபாய் அபராதமும், தலைக்கவசம் அணியாததால் 100 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

சுகாதார ஆய்வாளர் எனவும், சுகாதார பணி மேற்கொள்வதற்காக வந்ததாக தெரிவித்தும் காவல்துறையினர் அபராதம் விதித்தாக சுகாதார ஆய்வாளர் புகார் தெரிவித்துள்ளார் .

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் இது போன்ற மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது பொதுமக்கள் மத்தியிலும், சக முன் களப்பணியாளர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் விதித்த சிவகாசி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால முரளி கிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Updated On: 18 May 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  7. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  9. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  10. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை