காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

சிவகாசி யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் காலமுறை ஊதியம் வழங்க காேரி துாய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு காெடுத்தனர்.
சிவகாசி யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் சிவகாசி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறோம். மேற்கண்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் 2013-ல் நாரணாபுரம் கிராம பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டது முதல் எங்களுக்கு சேவை பதிவேடு வழங்கப்பட்டு தொகுப்பூதியம் பெற்று வந்தோம்.
தற்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி கடந்த 1-10-2017 முதல் ரூ. 3700 பெற்றோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வின்படி மாத ஊதியமாக ரூ.4,100 பெற்று வருகிறோம்.
ஆகவே அரசாணை 129-ன் படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் நாரணாபுரம் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க உரிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu