/* */

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
X

சிவகாசி யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் காலமுறை ஊதியம் வழங்க காேரி துாய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு காெடுத்தனர்.

சிவகாசி யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் சிவகாசி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறோம். மேற்கண்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் 2013-ல் நாரணாபுரம் கிராம பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டது முதல் எங்களுக்கு சேவை பதிவேடு வழங்கப்பட்டு தொகுப்பூதியம் பெற்று வந்தோம்.

தற்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி கடந்த 1-10-2017 முதல் ரூ. 3700 பெற்றோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வின்படி மாத ஊதியமாக ரூ.4,100 பெற்று வருகிறோம்.

ஆகவே அரசாணை 129-ன் படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் நாரணாபுரம் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க உரிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 Aug 2021 5:00 AM GMT

Related News