/* */

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- ஒருவர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில்  தீ விபத்து- ஒருவர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செந்தில்குமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பேன்சி ரக திரி வைக்கும்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செல்வி என்பவர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு, சிவகாசியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சட்டவிரோதமான பட்டாசு தயாரிப்பு குறித்து, திருத்தங்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 1:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...