/* */

விருதுநகரில் அம்மா இ-கிராமம் திட்டம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

விருதுநகர் மாவட்டம்அம்மா இ-கிராமம் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

விருதுநகரில் அம்மா இ-கிராமம் திட்டம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
X

விருதுநகர் மாவட்டம் அம்மா இ-கிராமம் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் அம்மா இ-கிராமம் திட்டத்தினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அம்மா இ-கிராமம் திட்டம் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஊராட்சி அளவில் இது வரை கிடைக்கப் பெறாத நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை கிராமங்களுக்குக் கொண்டு செல்ல முடியும்.

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி வட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இந்த கிராமத்திற்கு தகவல் தொழில்நுட்பவியல் வசதியினை கொண்ட கம்பியில்லா இணையதளம்(Hotspot), திறன்மிகு தெருவிளக்குகள்(Smart Screen Lighting), தொலைக்கல்வி(Tele Education), தொலை மருத்துவம்(Tele Medicine) போன்ற சேவைகள் வழங்கப்படும்.

அதன்படி, விஸ்வநத்தம் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடத்தில், கணினி அறிவு மையம் (Digital Knowlegde Center), கம்பியில்லா இணையதளம்(Hotspot), எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர் சேவை மையம், மகளிர் திட்ட பொது சேவை மையம் உள்ளிட்ட வசதிகள் பொது மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ், சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார், மின் மாவட்ட மேலாளர் ரஜனிதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  2. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  7. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  8. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்