/* */

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மாயம்

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மாயமாகி உள்ளனர்.

HIGHLIGHTS

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மாயம்
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் மாநகராட்சி தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் திமுக கட்சி தனிப்பெரும்பான்மையாக 25 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்கட்சியான அதிமுக கட்சி வேட்பாளர்கள் 11 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். அதிலும் திருத்தங்கல் பகுதியில் மட்டுமே 10 வார்டுகளில், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற முடிந்தது. சிவகாசி பகுதியி்ல் ஓரே ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வேட்பாளரால் வெற்றி பெற முடிந்தது. அதிமுக கட்சியின் சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல் இருவரும் தோல்வியடைந்தனர். இதனால் அதிமுக கட்சியினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அதிமுக கட்சியில் வெற்றி பெற்ற 9 கவுன்சிலர்கள், நேற்று இரவு முதல் திடீரென்று மாயமானார்கள். அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரும், நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாநகராட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த அதிமுக கட்சி தொண்டர்கள், அதிமுக கவுன்சிலர்கள் கட்சி மாறப்போவதாக வரும் தகவல்களால் மிகவும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் இருந்து வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!