சாணார்பட்டியில் பூட்டிக்கிடந்த பட்டாசு ஆலையில் திருட்டு: போலீஸார் விசாரணை

X
By - A.Stalin, Reporter |20 July 2021 7:15 PM IST
திருத்தங்கல் பட்டாசு ஆலையில் திருட்டு
பட்டாசு ஆலையில் திருட்டு
திருத்தங்கல், சாட்சியாபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் மாடசாமி ( 49). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாணார்பட்டியில் உள்ளது. பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில், ஆலை பூட்டியே கிடந்தது. இந்நிலையில், பட்டாசு ஆலையை திறந்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் திருடு போனது தெரியவந்தது. இந்த பட்டாசு திருட்டு சம்பந்தமாக மாடசாமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu