சிவகாசியில் ஊரடங்கு விதி மீறல் -பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு.

சிவகாசியில் ஊரடங்கு விதி மீறல் -பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு.
X

சிவகாசி பட்டாசு ஆலை..

சிவகாசியில் தொடரும் ஊரடங்கு விதிமீறல் - சாட்டையை சுழட்டும் சுகாதாரத்துறை.

சிவகாசியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார்.

சிவகாசி அருகே ஆணையூர் மற்றும் போடுரெட்டியப்பட்டி ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் கொரானா பொது முடக்க விதிமுறையை மீறி பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருவதாக சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு சென்று நடத்தப்பட்ட ஆய்வில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளும் அனுமதி இன்று செயல்பட்டது தெரியவந்தது. இரு பட்டாசு ஆலைகளுக்கும் சார் ஆட்சியர் தினேஷ் குமார் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?