/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விருதுநகரில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விருதுநகரில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நகர் மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை அப்பகுதிகளில் உள்ள நகராட்சி ஆணையாளர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று முடிந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர் சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட 5 நகராட்சி மற்றும் செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், எஸ்.கொடிக்குளம், சேத்தூர், சுந்தரபாண்டியம், W.புதுப்பட்டி, வத்ராப் உள்ளிட்ட 9 பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி முன்னிலையில் காணொளி கட்சி வழியாக இப்பகுதிகளில் உள்ள அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் அல்லது பேரூராட்சி செயல் அலுவலர்கள் பல்வேறு அரசு அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் இளவரசர் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். சாத்தூர் நகர் பகுதியில் உள்ள 24 வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் மதிமுக கட்சி சார்பிலும் திமுக சாத்தூர் நகர செயலாளர் குருசாமி நீதி மையம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  6. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  7. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  10. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்